ஔவைப் பாட்டி

ஔஔவைப் பாட்டி என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஏனெனில் குழந்தைகளூக்கு வழிகாட்டும் அருள்மொழிகள் பலவற்றை அவர் அள்ளி வழங்கியுள்ளார், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை உட்பட.

ஔவையாரின் வரலாறு மிகவும் ஸ்வாரஸ்யமானது. ஔவையார் தமிழ்த் திரைப்படம் ஔவையாராக கே.பி. சுந்தரம்பாள் நடித்து 1963ஆம் ஆண்டு வெளிவந்தது. அதில் ஔவையாரின் வரலாற்றை மிக அற்புதமாகப் படமாக்கியுள்ளனர். ஔவையாரைப்பற்றி நான் நூல்களில் படித்ததையும் ஔவையார் திரைப்படம் பார்த்த அனுபவத்தையும் வைத்து ஔவையார் பற்றிய சில சுவையான செய்திகளை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

ஔவையார் சிறுமியாய் இருக்கும்பொழுது ஒரு புலவர் அவரது தந்தையாரைக் காண வருவார். அவர் எழுதிய கவிதை ஒன்று,

நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா
-

என்று பாதியில் நின்றுவிட்டதென்று சொல்ல அப்போது அங்கு வரும் சிறுமி ஔவை

நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தானுண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.


என்று மீதிப்பாடலைப் புனைந்து கூறுவார்.

இப்பாடலின் பொருள் யாதெனில், "நாம் ஒருவருக்கு உதவி செய்கையில் அதன் கைம்மாறான பலன் நமக்கு என்று கிடைக்கும் என்று எண்ணிச் செய்யக்கூடாது. தென்னை மரம் அதன் வேரில் ஊற்றும் தண்ணீரை உண்டு வளர்ந்து, இளநீராகவும் தேங்காய்களாகவும் தன் தலையில் உருவாக்கி நமக்குத் தருவது போல் நாம் பிறர்க்குக் கைம்மாறு கருதாமல் உதவினால் நமக்கு உதவி தேவைப்படுகையில் அது தானாகவே கிடைக்கும்" என்பதாகும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home